‘பழிக்குப் பழி !

Published On:

| By Balaji

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி தியாகு. இவர் கொலை, வழிப்பறி என குற்றங்களைச் செய்து, அப்பகுதியில் ரவுடியாக இருந்து வந்தார். அவரின் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் முடிக்கப்படாமல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

இந்நிலையில் ரவுடி தியாகு, நேற்று காலை சரியாக 9.30 மணிக்கு வியாசர்பாடியில் உள்ள , நண்பரின் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்குச் சென்றிருக்கிறார்.

அப்போது அவரை ஃபாலோ செய்த ஐந்து பேர் கொண்ட மர்மகும்பல், திடீரென ஓட்டுநர் பயிற்சி மையத்துக்குள் நுழைந்து, நன்கு பேசிக்கொண்டிருந்த தியாகுவை, துடிதுடிக்க அரிவாளால் வெட்டிக்கொன்றது.

இதனால், அப்பகுதியில் தியாகுவின் ஆட்கள் சிலர் பிரச்னையில் ஈடுபட்டிருக்கின்றனர்.பின்னர் சிறிது நேரத்தில் வந்த, எம்.கே.பி நகர் போலீஸார் தியாகுவின் உடலைக் கைப்பற்றி, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக கொலைசெய்யப்பட்ட ரவுடி தியாகு, கடந்தாண்டு ஜுன் -22ஆம் தேதி, காலை 9.30 மணிக்கு ரவி எனும் வக்கீலை வெட்டிக்கொன்றிருக்கிறார்.

இந்நிலையில் அதே நாளில், ஒரு ஆண்டு கழித்து ரவுடி தியாகு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாகவே, அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறது, காவல்துறை. வடசென்னைப் பகுதியில் அடிக்கடி ரவுடிகள் கும்பல் ஒருவரை, ஒருவர் வெட்டிக்கொன்று சாகும் சம்பவம் நடைபெற்று வந்தாலும், ஒரு ஆண்டு கழித்து நடந்திருக்கும் இப்பழிவாங்கும் சம்பவத்தால் பலரும் பீதியாகியுள்ளனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share