கடந்த 2012ம் ஆண்டு சென்னை விமான நிலையம் நவீனபடுத்தப்பட்டது.அதன்பிறகு விமானநிலையத்தின் மேற்கூரை,கண்ணாடி என தொடர்ச்சியாக விபத்து நடந்து வருவது வாடிக்கையாகி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம்(மார்ச்-5) 61வது முறையாக விமானநிலைய கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் இந்திய விமானத் துறை ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
