காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பி வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் சர்வதேச கவனத்தையும் பெற்றுள்ளது. பல்வேறு தரப்பினரும் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் ஆறுதலைப் பகிர்ந்துள்ளனர்.
**சூர்யா**
சிஆர்பி வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் கோழைத்தனமான தாக்குதல் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மகன், கணவன், சகோதரரை இழந்த அவர்களது குடும்பத்துக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்து கொள்கிறேன்.
**ராதிகா**
புல்வாமா தாக்குதலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது மிகவும் கொடுமையானது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்திற்காக எனது இதயபூர்வமான வருத்தத்தை தெரிவிக்கிறேன்.
**ஜெயம் ரவி**
நமது ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் கொடூரமானது, கோழைத்தனமானது. ராணுவ வீரர்களை இழந்த குடும்பங்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள். உயிரிழந்த நமது ஹீரோக்களுக்கு வீர வணக்கம்.
**சித்தார்த்**
பாகிஸ்தான் தனது தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும். ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வலிமை சேரட்டும். இந்தியா கடுமையான பதிலடி அளிக்க வேண்டும்.
**விக்னேஷ் சிவன்**
புல்வாமா சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பழிவாங்கும் நோக்கத்தோடு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. உயிர்களை இழந்த நமது சகோதர்களுக்கு இதயம் நிறைந்த அஞ்சலி.
**பிரசன்னா**
வீரர்களின் இழப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்களுக்காகவும், அவர்களது குடும்பத்துக்காகவும் இதயம் வருந்துகிறது. பயங்கரவாதத்தை எந்தவித கருணை இல்லாமல் அழியுங்கள் அரசே..
