இந்த நூற்றாண்டில் இந்தியா முன்னிலை வகிக்கும்: மோடி

Published On:

| By Balaji

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அறிவை அடிப்படையாகக் கொண்ட 21ம் நூற்றாண்டு சகாப்தத்தில் இந்தியா முன்னிலை வகிக்கும். 35 வயதுக்கும் கீழே உள்ள 80 கோடி இளைஞர்களை இந்தியா கொண்டுள்ளது. ஒவ்வொரு இளைஞனின் கனவும் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். ஏழைகளுக்கு உதவ நாம் அனைவரும் சபதம் எடுத்துக்கொள்வோம். நமது நாடு புதிய உயரங்களையும், வளர்ச்சியையும் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் அதிகமுள்ள மக்கள் தொகையால் நாம் மென்மேலும் இலக்கை அடையமுடியும்” எனத் தெரிவித்துள்ளார்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share