’அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு’ : ராகுல் காந்தி வாக்குறுதி!

Published On:

| By Minn Login2

பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் உறுதி செய்யும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

”அனைத்து புதிய அரசுப் பணிகளிலும் பாதி ஆட்சேர்ப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

நாங்கள் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறோம்.

பாதுகாப்பான வருமானம், எதிர்காலம், ஸ்திரத்தன்மை மற்றும் சுயமரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தினை பலமாக மாற்றுவார்கள்.

50% அரசுப் பதவிகளில் பெண்களை வைத்திருப்பது நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பலத்தைத் தரும், சக்திவாய்ந்த பெண்கள் இந்தியாவின் தலைவிதியை மாற்றுவார்கள்” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

– மாணவ நிருபர் கவின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வட சென்னையில் ஐடி ஹப்: கலாநிதி வீராசாமி

நாளை முதல் OMR சாலையில் போக்குவரத்து மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share