அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று மதுரையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, முல்லைப் பெரியாறு பிரச்சனையில் திமுக தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கப்படுகிறது. ஆனால், 142 அடி நீர் தேக்க, உச்சநீதி மன்றத் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளது. செயலில் உள்ள திட்டத்தில் இவர்கள் எதை வலியுறுத்தப் போகிறார்கள்? யாரிடம் வலியுறுத்தப் போகிறார்கள்? பொய் வாக்குறுதிகளை அளித்து, மீண்டும் உங்களுக்கு துரோகம் செய்ய நினைக்கிறார்கள். கிரானைட் வழக்கில் 1,10,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக திரு.கருணாநிதி சொல்கிறார். 2012-ம் ஆண்டே கிரானைட் வெட்டப்படுவது எனது ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்டது. அப்படியானால் ஊழல் செய்தது திமுகதான் என்று தெரிகிறதா? எனவே இந்த முறை திமுக வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வந்தால் அவர்களை விரட்டி அடியுங்கள். திமுகவிற்கு 2011 சட்டமன்றத் தேர்தலில் கொடுத்ததை விட, 2014 நாடாளுமன்றத் தேர்தலை விட, மிகப்பெரிய சம்மட்டி அடியைக் கொடுக்க வேண்டும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத் தருவோம்” என்றார்.�,”
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி – ஜெயலலிதா
Published On:
| By Balaji

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel